'' அம்மா என்றால் அன்பு ''
மாதங்கள் பத்து சுமந்து
உன் கற்பனைகளால்
என்னை செதுக்கிய சிற்பியானாய்...
கருவில் என் பசி தீர்க்க
திகட்டும் பொழுதும்
உணவை உண்டு
என் உயிர் காத்தாய்...
பிறந்தவுடன்
மொழியில்லா என் ஆசைகளை
சிறு அசைவுதனில் புரிந்துகொண்டு
நிறைவேற்றி வைத்தாய்...
விரைவில் நான்
நடை பழக
உன் ஐவிரல் கொண்டு
என் ஒரு விரல் கோர்த்து
பல மைல்கள்
நீயும் நடந்திருப்பாய்...
தலை முடியில்
விரல் வருடி
வலக்கை நீட்டி
என் தலையணை ஆக்கி
வலிகள் தாங்கி
நான் தூங்க விழித்திருப்பாய்...
எனக்கு பசிக்கும் முன்னே
நீ அறிவதால்
பசியை நானோ அறிந்ததில்லை...
குளநீரை கல்லெறிந்து
கலைப்பது போல்
என் தோல்விகளில்
உன் குரல் எறிந்து
என் சோகங்கள்
கலைத்து நிற்ப்பாய்...
எடைதட்டில் உனை அமர்த்தி
உனக்கு சமம் பார்க்க
இவ்வுலகில் ஏதுமில்லை...
இங்கு
உன்னைப்போல்
எந்த தெய்வமும் இல்லை....
No comments:
Post a Comment
இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!