தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Friday 28 September, 2012

நகைச்சுவை நேரம்:-

செந்தில்: அண்ணே...அண்ணே.... சாப்ட்வேர்னா என்ன...? ஹார்ட்வேர்னா என்னன்னே....?
கவுண்டமணி: அடே ப்ளூடூத் மண்டையா.......'செடி'ய புடுங்குனா வருமே அது சாப்ட்வேரு... 'மரத்த' புடுங்குனா வருமே அது ஹார்ட்வேரு.... இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு 'ஆல் இன் ஆல்' அழகு ராஜா தேவைங்குறது......
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராப்பிச்சை.., இது என்ன பத்திரிகை?"
"என் நகைக்கடை திறப்புவிழா பத்திரிகைம்மா அவசியம் வந்திருங்க".
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
தந்தை : நான் உன்னை அடிச்சுட்டா உன் கோபத்தை நீ எப்படி கண்ட்ரோல் பண்ணுவே?
மகன் : டூத் ப்ரஷினால டாய்லெட் சுத்தம் செய்வேன்.
தந்தை : அதனால எப்படி கோபம் கட்டுப்படும்!!!
மகன் : அந்த ப்ரஷ் உங்க ப்ரஷ் ஆச்சே. ஹி..ஹி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
காதலி: ஒரு அழகான கவிதை சொல்லுடா.
காதலன்: உன்னை கண்டதும் என்னை மறந்தேன்.
காதலி: அப்புறம்?
காதலன்: உன் தங்கையை கண்டதும் உன்னையே மறந்தேன்...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாமனார்: மாப்பிள்ளைக்கு குழந்தை மனசுன்னு சொன்னீங்க.. அதுக்காக இப்படியா..?
தரகர்: ஏன் என்ன பண்ணினாரு?
மாமனார்: பொண்ணு பார்க்கும் போது 'மாமா பிஸ்கோத்து" வேணும் என்று தட்டுல வச்சிருந்த பிஸ்கட் பாக்கெட்ட கேட்குறாரு...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
"ஆரம்பத்துலே படத்துக்கு பத்துக்கோடிதானே பட்ஜெட் சொன்னீங்க, இப்போ இருபதுன்னு சொன்னா எப்படி? எதற்கு?"
"ஒருவேளை படம் ஓடாட்டி படத்தை வாங்கினவங்களுக்கு திருப்பிக் கொடுக்கறதுக்காகதான் பட்ஜெட்டுல ரீஃபண்ட் திட்டம் வச்சிருக்கோம்!"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
"வேலை எல்லாம் முடிச்சிட்டுப் போன உங்க வீட்டு வேலைக்காரி, திடீர்னு திரும்பவும் வந்துட்டுப் போறாளே...  ஏன்?"
"பக்கத்து வீட்டைப் பத்தி ஏதாவது ஃபிளாஷ் நியூஸ் இருக்கும்...."
--------------------------------------------------------------------------------------------------------------------------------------                                வக்கீல்: "உங்க கணவரை டைவர்ஸ் பண்ண என்ன காரணம் சொல்லப்போறீங்க மேடம்!"
கிளையண்ட்: "போலி கணவர்னு கேஸ் போட்டா கேட்சிங்கா இருக்குமே!"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
"கபாலி திரும்பவும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கப் போறானாம் ஏட்டய்யா..."
"அவன்கிட்ட வாங்கற மாமூல் பணம், அவனுக்கு மொய் வைக்கவே சரியாப் போயிடும் போலிருக்கே...!"
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
"என்னுடைய கல்யாண நாள் வரும் போதெல்லாம் உங்க ஞாபகம் தான் சார் வரும்.."
"எதனால?"
"நீங்க ரெண்டு பந்தியில் சாப்பிட்டும் மொய் எழுதாம போனீங்கல்ல.. அதனால!"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------- "சே.. அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்காரு.."
"பேசட்டுமே சார்... நம்ம கட்சி பிரமுகர்தானே.."
"நீங்க வேற... அந்த ஆள் மைக் டெஸ்ட் பண்றவன் சார்.."
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

Sunday 9 September, 2012

இவை விதைகள் அல்ல உடல்நலம் காக்கும் விருட்சங்கள்:


குடைமிளகாய் விதை:
தற்போது பல வகையான குடைமிளகாய் வந்துள்ளது. ஆனால் அதில் பெல் பெப்பர் என்னும் கடை மிளகாயில் தான் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் இதனை சமைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையானதாக இருக்கும். ஆனால் பெரும்பாலும் நிறைய பேர் குடைமிளகாயை சமைக்கும் போது, அதிலுள்ள விதையை தூக்கிப் போட்டுவிட்டு, அதன் சதையை மட்டும் தான் சமைப்பார்கள். இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம். ஏனெனில் அதன் விதையில் வைட்டமின் ஏ, சி, கே இருக்கிறது. அதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எளிதில் வயதான தோற்றத்தை தருவதையும் தடுக்கும். ஏனெனில் அந்த விதையில் வயதான தோற்றத்தை தடுக்கும் லைகோபைன் என்னும் பொருள் உள்ளது. ஆகவே இதை சாப்பிட்டால் இளமையோடு காட்சியளிக்கலாம்.

பப்பாளி விதை:
அனைவருக்கும் பப்பாளியின் நன்மைகளைப் பற்றி நன்கு தெரியும். ஆனால் அதன் விதைகளில் எத்தனை சத்துக்கள் உள்ளன என்பது தெரியாது. எப்படி பப்பாளியின் சதையில் நிறைய சத்துக்கள் உள்ளதோ, அதேப் போல் அதன் விதைகளிலும் உள்ளது. பப்பாளியின் விதைகளை சாப்பிட்டால், சிறுநீரகத்தில் இருக்கும் டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறுவதோடு, செரிமானத்தை அதிகரிக்கிறது. அதிலும் வாயுத் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு ஸ்பூன் பாப்பாளியின் விதையை சாப்பிட்டால் சரியாகிவிடும். வேண்டுமென்றால் அதனை காய வைத்து, உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம். உடல் நலத்திற்கு மட்டும் இது நல்லதல்ல, அழகிற்கும் தான் நல்லது. வேண்டுமென்றால் அதனை ஃபேஸ் பேக்கிற்கு பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக மின்னும்.

மாதுளை விதை:
இனிமையான சுவையைக் கொண்ட மாதுளை பழம் முழுவதுமே விதைகளால் மட்டும் தான் நிரம்பியுள்ளது. இதனை யாரும் தூக்கிப் போடமாட்டார்கள். ஆனால் அதன் சிறப்பான பலனை பற்றி சிலருக்கு தெரியாது. சிலர் அதன் ஜூஸை மட்டும் சாப்பிட்டுவிட்டு, விதையை துப்பிவிடுவார்கள். ஆனால் அதன் விதையை டயட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டால், உடல் எடை ஈஸியாக குறையும். அதனை ஒரு ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். மாதுளையில் இருக்கும் பைட்டோகெமிக்கலில், கேன்சர், டியூமர், இதய நோய் போன்றவற்றை தடுக்கும் பாலிஃபீனால் இருக்கிறது. ஆகவே இந்த பழத்தை சாப்பிட்டு, உடலை நன்கு பிட்டாக வைத்துக் கொள்ளுங்கள்.

பூசணிக்காய் விதை:
டயட் மேற்கொள்வோருக்கு பூசணிக்காயின் விதைகள் மிகவும் சிறந்தது. ஏனெனில் அவற்றில் குறைந்த அளவு கலோரியும், கொலஸ்ட்ராலின் அளவு குறைவாகவும் உள்ளது. அதுமட்டுமல்லாமல், அதில் எலும்புகளுக்கு வலுவூட்டுகின்ற, சிறுநீரகக் கற்களை கரைக்கக்கூடிய சத்துக்களான இரும்பு மற்றும ஜிங்க் இருக்கின்றன. மேலும் குடலில் ஏதேனும் ஒட்டுண்ணிகள் இருந்தால், பூசணிக்காயின் விதைகளை சாப்பிட்டால் சரியாகிவிடும். வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் செரிமானப் பிரச்சனைகள் இருந்தால், அவற்றை பூசணிக்காயின் விதைகள் சரிசெய்துவிடும்.

தக்காளி விதை:
சருமத்தை அழகாக்க பயன்படும் பொருட்களில் தக்காளியும் ஒன்று. இத்தகைய தக்காளியின் உள்ளே இருக்கும் விதைகளை சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் இவை உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். அதுமட்டுமல்லாமல் இந்த தக்காளியின் விதையில் உள்ள ஆன்டி-க்ளாட்டிங் என்னும் பொருள், இதயத்தில் எந்த அடைப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். இப்போது சொல்வதை நம்புவீர்களோ, இல்லையோ, தக்காளியின் விதைகளை சாப்பிட்டால், விரைவில் செரிமானம் ஆகாது. ஆனால் மலச்சிக்கலை சரிசெய்யும். மேலும் செரிமானம் நடைபெற்று வெளியேறும் செரிமானப் பாதையை சுத்தம் செய்யும்.

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...