தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Wednesday 24 January, 2024

*15 பழக்கங்கள் உங்களுக்கே உங்கள் மீது மரியாதையை ஏற்படுத்தும்*

 

நாம் அனைவருமே பல இடங்களில் பிறருடைய மரியாதை நமக்கு கிடைக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறோமே தவிர, நாம் நம் மீது எத்தகைய மரியாதை வைத்துள்ளோம் என்பது பற்றி கவலைப்படுவதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் வெளியில் இருந்து உங்களுக்கு கிடைக்கும் மரியாதையை விட, உங்கள் மீது உங்களுக்கே ஏற்படும் மரியாதையால் கிடைக்கும் உணர்வு உண்மையிலேயே சிறப்பானது. அத்தகைய உணர்வை ஏற்படுத்தும் 15 பழக்கங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.  

1. வாழ்க்கையில் எதுவும் விரைவாகக் கிடைக்க வேண்டும் என அவசரப்படாதீர்கள். நிறுத்தி, நிதானமாக, தெளிவாகச் செய்யும் செயல்களே உங்களுக்கானதை பெற்றுத் தரும்.


2. அனைவருக்கும் எல்லா நேரங்களிலும் Available-ஆக இருக்காதீர்கள். மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்குவது நல்லதுதான், இருப்பினும் ஏன் அனைவருக்காகவும் நீங்கள் மட்டும் இந்த நேரத்தை வீணடிக்க வேண்டும் என ஒரு முறை சிந்தியுங்கள். 


3. உங்களது தைரியத்தை பயன்படுத்துங்கள். நீங்கள் இறுதியாக எந்த இடத்தில் தைரியமாக செயல்பட்டீர்கள் என்பதை ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். எங்கும் தைரியமாக செயல்படவில்லை என்றால், தைரியமாக ஏதாவது செய்யுங்கள். 


4. பிறரை நல்லபடியாக உணர்வைக்கும் நபராக இருங்கள். அதற்காக பிறரிடம் கெஞ்ச வேண்டும் என அர்த்தம் இல்லை. நீங்கள் உங்களுக்கு பிடித்தபடி எதார்த்தமாக இருந்தாலே அனைவரும் நன்றாக உணர்வார்கள். 


5. உங்களுக்கு அதிகம் பயம் ஏற்படுத்துவதை செய்ய முயலுங்கள். இந்த தைரியமான முடிவு உங்கள் மீது உங்களுக்கு மரியாதையைக் கொண்டு வரும். 


6. உங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சில விஷயங்களை செய்யுங்கள். உதாரணத்திற்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது போன்றவை தன்னம்பிக்கையை அதிகரிக்கும். 


7. வாழ்க்கையில் தனியாக இருக்க நேர்ந்தால், அதை நினைத்து வருந்தாதீர்கள். தனிமையை உங்களுக்கு எப்படி சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது பற்றி சிந்தியுங்கள். 


8. எல்லா இடங்களிலும் குறைவாகவே பேசுங்கள். குறைவாக பேசுவது பல இடங்களில் உங்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும். குறைவாகப் பேசும் பழக்கம் பிறருக்கு உங்கள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும். 


9. பிறருடைய அனுமதிக்காக எப்போதும் காத்திருக்காதீர்கள். உங்களுக்கு தோன்றுவதை தைரியமாக செய்யுங்கள். 


10. தவறான விஷயங்களுக்கு மிக மோசமாக React செய்யாதீர்கள். எல்லா சூழ்நிலைகளிலும் அமைதியாக இருப்பது உங்களின் கட்டுப்பாட்டை வெளிப்படுத்தும். 


11. பிறரை கட்டுப்படுத்துவதை நிறுத்துங்கள். உங்களால் எந்த நபரையும், எந்த சூழ்நிலையும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. எனவே அதன் போக்கில் அவற்றை விட்டுவிட்டு உங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துங்கள். 


12. நன்கு கவனிப்பவராக இருங்கள். அனைத்தையும் கவனிப்பவர்களால் மட்டுமே, சிறப்பான விஷயங்களை செய்ய முடியும். 


13. நீங்களும் தவறு செய்கிறீர்கள் என்பதை கொஞ்சம் வெளி உலகத்திற்கு தெரியப்படுத்துங்கள். எல்லா நேரங்களிலும் உங்களை சரியானவராக காட்டிக்கொள்ள முயற்சிப்பது, நிச்சயம் உங்கள் மீது உங்களுக்கு மரியாதையை ஏற்படுத்தாது.


14. வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை ஏற்படுத்திக் கொண்டு வாழுங்கள். ஏன் வாழ்கிறோம் என்பதே தெரியாமல் ஏதோ ஒரு போக்கில் இருந்து கொண்டிருந்தால், வாழ்க்கை என்னவென்பதே உங்களுக்கு புரியாது. 


15. நீங்கள் சொல்வதை செய்து காட்டுங்கள். நீங்கள் எடுக்கும் தீர்மானங்களை சொன்னபடியே முடித்துக் காட்டும்போது, சுயமரியாதை மேலோங்கிச் செல்கிறது. 


இந்த 15 விஷயங்களை நீங்கள் பின்பற்றுவது மூலமாக உங்கள் சுயமரியாதையை நீங்களே உணர்ந்து, உங்களை நீங்களே சிறப்பாக உணர முடியும். இது வாழ்க்கையில் பல விஷயங்களை தைரியமாக கடந்து செல்ல உங்களுக்கு உதவும்.


Courtesy: Kalkionline.com

Sunday 14 January, 2024

போகிப் பண்டிகை எனும் திருநாள்...

  *அனைவருக்கும் இனிய போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள்...*


போகி: தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை சனவரி 13 ஆம் நாளில் கொண்டாடப்படும். ஆனால் சில ஆண்டுகளில் சனவரி 14 ஆம் நாளிலும் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் இறுதி நாளையே போகிப் பண்டிகையாக தமிழ் நாட்காட்டியில் குறிப்பிடுகிறார்கள். பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.


இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது.

வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.

இவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் "ருத்ர கீதை ஞான யக்ஞம்" என அழைக்கப்படும் அக்னி குண்டத்தில் எறிந்து பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். பல்வேறு தெய்வீகக் குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது. பெரும் பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் லோரி எனப்படும் பண்டிகைக்கு முந்தைய நாளில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுபடுத்துகிறார்கள்.

போகி அன்று, வைகறையில் 'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர். சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்.

போகிப் பண்டிகையின் போது கூழ், மாவிளக்கு, போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...