தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Monday 1 September, 2014

தீபாவளித் திருநாள் கவிதைப் போட்டி-2014: 2.தனிக்கவிதை - உழைப்பு!

 

காட்டைத் திருத்தி கழனிதந்தது உழைப்பு
நாட்டை திருத்தி நம்பிக்கைதந்தது உழைப்பு

ஏட்டில் படித்ததை கண்முன்தந்தது உழைப்பு
பாட்டில் படித்தாலும் உவகைதந்தது உழைப்பு

எளிமை வென்றிட வலிமைதந்தது உழைப்பு
வலிமை தொடர்ந்திட வழியும்தந்தது உழைப்பு

வாழ்வை போற்றிட வளமைதந்தது உழைப்பு
தாழ்வை மறந்திட திறமைதந்தது உழைப்பு

உயர்வாய் வாழ்ந்திட கற்றுத்தந்தது உழைப்பு
அயர்வாய் இருப்பின் உரமாய்இருந்தது உழைப்பு

மாற்றம் பெறவே விதையைதந்தது உழைப்பு
ஏற்றம் காணவே ஏணியைதந்தது உழைப்பு

நெல்லின் மணியாய் நிறைவைத்தந்தது உழைப்பு
சொல்லின் அழகாய் பெருமைதந்தது உழைப்பு

உயிர்கள் பருகிட உணவைதந்தது உழைப்பு
உண்மை உணர்ந்திட உரிமைதந்தது உழைப்பு

மண்ணை போற்றிட கற்றுத்தந்தது உழைப்பு
விண்ணை பெற்றிட வெற்றிதந்தது உழைப்பு 

வெற்றிக் கனியமுதை  பெற்றுத்தந்தது உழைப்பு
சுற்றி வந்தோருக்கும் சுறுசுறுப்புதந்தது உழைப்பு

வளத்தை பெருக்கிடும் நலத்தைதந்தது உழைப்பு
பலத்தை பெருக்கிடும் பாங்கைதந்தது உழைப்பு

பொறுப்பாய் நடந்திட ஊக்கம்தந்தது உழைப்பு
சிறப்பாய் வாழ்ந்திட முதலும்தந்தது உழைப்பு!

இப்படைப்பானது தீபாவளித் திருநாளை முன்னிட்டு திரு.ரூபன் & திரு.யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014  க்காக எழுதி பகிரப்பட்டுள்ளது.


நன்றி!

என்றும் அன்புடன்,
நடராஜன் வி.

No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...