தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Monday 1 September, 2014

தீபாவளித் திருநாள் கவிதைப் போட்டி-2014: 1.படக்கவிதை

 

மாலையிட காத்திருக்கும் மங்கையிவள் தானோ
மங்கையென பூத்திருக்கும் நங்கையினம் தானோ
சிறுவயது தோழனாய் சிரித்து மகிழ்ந்தவன் தானோ
சிறுதும்பி பிடித்தே சிந்தைக் கவர்ந்தவன் தானோ
பள்ளிப்பருவத்தே படித்து உதவியவன் தானோ
படித்தே உயர்ந்திட பாதை வகுத்தவன் தானோ

 
சிந்தை நினைவினில் சேர்ந்தே இருப்பவன் தானோ
எந்தை மனதிலும் ஏற்றம் கொண்டவன் தானோ
எளிய பண்பினால் உள்ளம் கவர்ந்தவன் தானோ
உயர்ந்த குணத்தினால் உலகம் போற்றுபவன் தானோ
நாட்டிற்கு சேவை ஆற்றும் நற்கனவான் தானோ
எல்லையை வல்லமையால் பாதுகாப்பவன் தானோ

 
எதிரியை வீரத்தினால் தோற்க செய்தவன் தானோ 
விடுமுறை நாள்தனிலே விரைந்திடுவான் தானோ
பூமாலை தந்தே  என்மனம் மகிழ்விப்பான் தானோ
பூச்சொரிந்து காத்திருக்கும் பூமகள் இவள் தானோ
காத்து நினைந்(த்)திருக்கும் நிலை அறிவான் தானோ
மங்கையிவள் ஏக்கம் முற்றும் உணர்ந்தவன் தானோ 


மாலை அணிவித்தே உள்ளம் கவர்வான் தானோ
காலத்தின் மதிப்பதனை காட்டி தந்தவன் தானோ
திங்கள் முடியும்முன் கண்ணன் வருவான் தானோ
குறித்த நாளினிலே தங்கத்தாலி தருவான் தானோ
இல்லறம் இனித்திட இணைந்தே  இருப்பான் தானோ
நல்லறம் போற்றிட பொது-நலம் விழைவான் தானோ 

இப்படைப்பானது தீபாவளித் திருநாளை முன்னிட்டு திரு.ரூபன் & திரு.யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014  க்காக எழுதி பகிரப்பட்டுள்ளது.


நன்றி!

என்றும் அன்புடன்,
நடராஜன் வி. 

2 comments:

Anonymous said...

வணக்கம்
தங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

V.Nadarajan said...

வணக்கம் ரூபன் சார்.

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி...

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...