தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Saturday 16 March, 2013

பொது அறிவு தகவல் துளிகள் 1

• கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. 
 
• இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாவது ஜோதிடப் புத்தகங்கள்தான்.
 

 
• தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சட்டசபைத் தொகுதி சென்னையிலுள்ள வில்லிவாக்கம்.
 

 
• சலவைக்கல்லுக்குப் பெயர் பெற்ற நாடு இத்தாலி.
 

 
• உலகிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நாடு இந்தியாதான்.
 

 
• ஆமை நிலத்தில்தான் மெதுவாகச் செல்லுமே தவிர நீரில் வேகமாக நீந்தும்.
 

 
• உலகிலேயே மினரல் வாட்டர் அதிகம் பயன்படுத்துபவர்கள் ரஷ்யர்கள்தான்.
 

 
• தாய்லாந்து நாட்டில் மீன் சண்டை ஒரு பிரபலமான விளையாட்டு.

• அமெரிக்காவில் ஒவ்வொரு நிமிடமும் 12 கார்கள் தயாரிக்கப்படுகின்றன.
 

 
• உலகிலேயே அதிகமாக சேமிப்பவர்கள் சிங்கப்பூர்க்காரர்கள்தான்.
 

 
• இந்தியாவின் முதல் பைலட் ஜே.ஆர்.டி.டாட்டா.


• இந்தியாவிற்குள் நுழைந்த முதல் ஐரோப்பிய வீரன் அலெக்ஸாண்டர்.

• குதிரை லாயத்தில் வேலை செய்தவரின் மகன்தான் பிரபல ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர். 
 
• எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே தம் வாழ்நாளில் பேனா பிடித்ததில்லை. பென்சில்தான்.
 

 
• கிரேக்க நாட்டு தேசியகீதம்தான் உலகின் மிக நீளமான தேசியகீதம். 128 வரிகள்.

• மின்சார ரயிலை இயக்க 16 ஆயிரம் வோல்ட் மின்சாரம் தேவைப்படுகிறது. 
 
• உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் வளரக்கூடிய ஒரே பிராணி நாய்.

• அதிகாலை நேரத்தில் மட்டுமே வாத்துகள் முட்டையிடும்.
 

 
• கைக்குட்டை, பதினான்காம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

• எகிப்திய இதிகாசத்தில் "இசிஸ்' என்ற பெயர் "ராணி'யைக் குறிக்கின்றது.

• கடல் வழியே அனுப்பப்படும் தந்திக்கு "கேபிள்' என்று பெயர்.
 
• ஜப்பானில் மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதுவதற்குக் கற்றுக் கொடுக்கிறார்கள்.


• முதன் முதலில் தமிழில் தந்தி அனுப்பும் முறை ஈரோட்டில் அறிமுகமானது. 
 
• தமிழ்ப் பத்திரிகைகளில் முதன் முதலில் கார்ட்டூன்களை வெளியிட்டவர் மகாகவி பாரதியார்.
  

 
• ஜப்பானியர்களுக்கு 3 என்ற எண் பிடிக்காது.
 

 
• ஒரு குண்டூசியின் தலைப் பரப்பில் பத்தாயிரம் பாக்டீரியாக்களை அடுக்க முடியும்.
 

• இமய மலையில் வசிக்கும் யாக் எருமையின் பால் பழுப்பு நிறத்தில் இருக்கும். 
 
• டி.வி.ஆன்டெனா, சமயங்களில் இடிதாங்கியாகவும் செயல்படும்.

• டிப்பர் என்ற பறவை நீரின் அடி ஆழத்திற்குச் சென்று, இரையைப் பிடிக்கும்.
 

 
• ஆழ்கடலைப் பற்றி ஆராயக்கூடிய இயலுக்கு ஓஷனோகிராஃபி என்று பெயர்.
 

 
• இந்தியாவில் 22,000-க்கும் மேற்பட்ட ரெயில்வே லெவல் கிராஸிங்குகளுக்கு மூடுகதவே (கேட்) கிடையாது.
 

 
• இந்தியாவில் முதன் முதலாக மின்சார வசதியைப் பெற்றது கல்கத்தா நகரம்.

• 10 நிமிடங்கள் ஓடக்கூடிய கார்ட்டூன் திரைப்படத்துக்கு சுமார் 1,100 சித்திரங்கள் தேவைப்படும். 
 
மனிதனின் தும்மல் வேகம் மணிக்கு 180 கிலோமீட்டர்கள் தூரம் இருக்கும்.

• உலகிலேயே அதிகமாக இனிப்பு சாப்பிடுகிறவர்கள் இங்கிலாந்துக்காரர்கள். 
 
• உலகிலேயே சீனாவில்தான் சைக்கிள்கள் அதிகம்.
 

 
• ஜோக்ஸ் சொல்லித் தருவதற்கென்றே ஒரு கல்லூரி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் உள்ளது.
 

 
• உலகில் அதிக அளவு கண்தானம் வழங்குபவர்கள் இலங்கைக்காரர்கள்தான்.
 

 
• கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒ
üவையாருக்கு மூன்று கோயில்கள் உள்ளன.
 
• உலகிலேயே அதிக அளவில் தபால் நிலையங்கள் உள்ள நாடு இந்தியாதான்.

• முதன் முதலில் மருத்துவமனை அமைக்கப்பட்ட நாடு இத்தாலி.
 

 
• நீர்யானை மனிதனைவிட வேகமாக ஓடும்.

• ஆஸ்திரேலியாவில் மனிதர்களைவிட ஆடுகளே அதிகம்.
 
• உலகில் 26 நாடுகளில் கடற்கரை கிடையாது.
 

 
• பூமிக்கு மிக அருகிலுள்ள நட்சத்திரமே 4,02,32,500 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளதாம்.
 

 
• விரல்களின் 40 சதவீத பலம் கட்டை விரலில்தான் இருக்கின்றது.
 

 
• ஏப்ரல் முதல் தேதியை முட்டாள்கள் தினமாக முதழி முதலில் கொண்டாடிய நாடு இங்கிலாந்து.

• யானை தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமே பிற மிருகங்களுடன் சண்டையிடும்.
 
• விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் இரண்டு முறை எம்.பி.ஆக இருந்தவர்.
 
• ஒரு சிலந்தி வலையிலுள்ள நூல் முமுவதையும் இழுத்துப் பார்த்தால் 2000 மைல்கள் நீளம் கூட இருக்கும்.

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...