தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Sunday 13 December, 2015

தமிழனின் நீர் மேலாண்மை:


(1) அகழி - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

(2) அருவி  - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
(3) ஆழிக்கிணறு - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
(4) ஆறு - பெருகி ஓடும் நதி.
(5) இலஞ்சி - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
(6) உறை கிணறு - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
(7) ஊருணி - மக்கள் பருகும் நீர் நிலை.
(8) ஊற்று - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
(9) ஏரி - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
(10) ஓடை - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
(11) கட்டுங்கிணக் கிணறு - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
(12) கடல் - சமுத்திரம்.
(13) கண்மாய் (கம்மாய்) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
(14) கலிங்கு - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
(15) கால் - நீரோடும் வழி.
(16) கால்வாய் - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
(17) குட்டம் - பெருங் குட்டை.
(18) குட்டை - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
(19) குண்டம் - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
(20) குண்டு - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
(21) குமிழி - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
(22) குமிழி ஊற்று -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்குகொப்பளித்து வரும் ஊற்று.
(23) குளம் - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.
(24) கூவம் - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
(25) கூவல் - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
(26) வாளி - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
(27) கேணி - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
(28) சிறை - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
(29) சுனை - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
(30) சேங்கை - பாசிக்கொடி மண்டிய குளம்.
(31) தடம் - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
(32) தளிக்குளம் - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
(33) தாங்கல் - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
(34) திருக்குளம் - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
(35) தெப்பக்குளம் ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
(36) தொடு கிணறு - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
(37) நடை கேணி - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
(38) நீராவி - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
(39) பிள்ளைக்கிணறு - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
(40) பொங்கு கிணறு - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
(41) பொய்கை- தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
(42) மடு - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
(43) மடை - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
(44) மதகு - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.
(45) மறு கால் - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
(46) வலயம் - வட்டமாய் அமைந்த குளம்.

நன்றி: இணையம்



நட்புடன்/அன்புடன்,
நடராஜன் வி.
http://vienarcud.blogspot.com/

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...