தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Friday 28 November, 2014

நோயற்ற வாழ்விற்கு சில குறிப்புகள்:


1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. காலை உணவு ஒர் அரசன் போலவும், மதிய உணவு ஒர் இளவரசன் போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண
வேண்டும்.

3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு, பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்து விடுங்கள்.

4. உடற்பயிற்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

6. கடந்த வருடத்தைவிட இந்த வருடம் நிறைய புத்தகம் படியுங்கள்.

7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.

21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.

22. மன்னிக்கப் பழகுங்கள்.

23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.

26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

Thursday 20 November, 2014

உலகளாவிய தமிழர்கள்: பகுதி 2

1. அர்ஜுன் அப்பாதுரை:
அர்ஜுன் அப்பாதுரை, உலகமயமாக்கல் மற்றும் நவீனம் குறித்து ஆராயும் தற்கால ஆய்வாளர். இவர் 1949இல் பிறந்து, தற்சமயம் நியூ யார்க்கில் வாழ்கிறார். இவர் திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலின் தேரோட்டத்தை மையமாக கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.


2. எம்.நைட் ஷியாமளன்:
எம். நைட் ஷியாமளன் அல்லது மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன்(பிறப்பு ஆகஸ்டு 6, 1970, மாஹே, இந்தியா) புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஆவார். இவரின் முதலாம் ஹாலிவுட் திரைப்படம், த சிக்ஸ்த் சென்ஸ், ஆறு ஆஸ்கர் விருதுகளிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவர் மாஹேயில் ஒரு மலையாளி அப்பாவுக்கும் ஒரு தமிழ் அம்மாவுக்கும் பிறந்து பிலடெல்பியாவின் ஒரு புறநகரத்தில் வளர்ந்தார்.


3. ஜேம்ஸ் அப்பாதுரை:
ஜேம்ஸ் அப்பாதுரை, (பிறப்பு: ஆகஸ்ட் 7, 1968), ஒரு கனடா நாட்டு இதழாளர் ஆவார். தற்போது, மத்திய ஆசியாவிற்கான நேட்டோவின் தலைவரின் சிறப்புப் பிரதிநிதியாகப் பணியாற்றுகிறார்.இவர் கனடாவின் டொராண்டோவில் பிறந்தவர்.ஆம்ஸ்டர்டாம்,டொராண்டோ பல்கலைக் கழகங்களில் பயின்றவர். நேட்டோவில் சேரும் முன்பே, கனடாவின் இராணுவத் துறையில் சார்ந்த கனேடிய ஒலிபரப்புப் கூட்டுத்தாபனத்தில் இதழாளராகப் பணியாற்றினார்.


4. ரெங்கநாதன் சீனிவாசன்:
ரெங்கநாதன் சீனிவாசன் (ஏப்ரல் 11, 1910 - சூன் 5, 1958) மொரிசியசு தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரும் ஆவார். ரெங்கநாதன் 1910 ஆம் ஆண்டில் போர்ட் லூயிஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாட்டில் பிறந்து மொரீசியசில் குடியேறியவர். தாயார் மொரிசியசுத் தமிழர். 1935 இல் இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். 1940 ஆம் ஆண்டில் இவர் சட்டத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். அதே ஆண்டு டிசம்பரில் மொரிசியசு திரும்பி உள்ளூரில் வழக்கறிஞராகப் பணியாற்ற ஆரம்பித்தார். போர்ட் லூயிசு மாநகரசபையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 சூலையில் மொரிசியசின் முதலாவது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். ரெங்கநாதன் சீனிவாசன் 1958 ஆம் ஆண்டில் போர்ட் லூயிசில் காலமானார். மொரிசியசு அரசு இவரது படம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயத் தாளை வெளியிட்டது. ரெங்கநாதன் சீனிவாசனின் பெயரில் அரசு உயர்நிலைப் பள்ளியும் போர்ட் லூயிசு நகரில் இயங்குகிறது. இவரது நூற்றாண்டு நினைவாக மொரிசியசு அரசு முதல்நாள் அஞ்சலுறையையும் வெளியிட்டது.

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...