தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Monday 16 June, 2014

கூகுள் கண்ணாடி (Google Glass):

அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துவிட்ட கூகுள் கண்ணாடிகள்-இனி கம்ப்யூட்டர்களுக்கும், லேப்டாப்களுக்கும், டேப்லெட்டுகளுக்கும் கூட டாடா பைபை சொல்லி விடலாம்.


தொழில்நுட்பத்தில் அடுத்த மைல் கல்லாக கூகுள் கண்ணாடிகள் வந்துவிட்டன. அவை இன்று முதல் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுஉலகில் அறிவியலில். புரட்சி என்பது, மின்சாரத்துக்கு பிறகு கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் சாத்தியமானது. இன்று இன்டர்நெட்டின் மூலம் உலகின் எல்லா தகவல்களையும் ஒரு நொடியில் பெற்று விட முடிகிற அளவுக்கு அறிவியல் முன்னேறி உள்ளது.

அதே போல் ஒரு நாட்டின் மூலை முடுக்குகளை கூட இன்டர்நெட் மூலம் பார்க்க முடியும். ஆரம்பத்தில் மிக பிரமாண்டமாக இருந்த கம்ப்யூட்டர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து கையடக்க செல்போன் அளவுக்கு மாறிவிட்டன.இப்போது கூகுள் நிறுவனம் வடிவமைத்துள்ள கண்ணாடி, உலகத்தை நம் கண்ணுக்கு அருகிலேயே கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. இதுவரை சோதனை முயற்சியாக செய்யப்பட்டு வந்த கூகுள் கண்ணாடிகளை இன்று முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டுவர கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தற்போது 1500 டாலர் விலையில் கிடைக்கும் இந்த கண்ணாடிகளை அமெரிக்கவாசிகள் அணிந்து கொண்டு நாட்டின் எந்த பகுதியில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் இன்டர்நெட்டில் வலம் வரலாம். இனி கம்ப்யூட்டர்களுக்கும், லேப்டாப்களுக்கும், டேப்லெட்டுகளுக்கும் கூட டாடா பைபை சொல்லி விடலாம்.

Saturday 7 June, 2014

உலகின் பணக்காரக் கிராமம்:

மதாபர்க்காரர்கள் சிலர் தங்கள் ஊரை இந்தியாவின் பணக்காரக் கிராமம் என்று சொல்கிறார்கள்; சிலர் ஆசியாவின் பணக்காரக் கிராமம் என்று சொல்கிறார்கள்; சிலர் உலகின் பணக்காரக் கிராமம் என்று சொல்கிறார்கள். இது மூன்றிலுமே கொஞ்சம் உண்மை இருக்கலாம். நிச்சயம் இந்தியாவில் இப்படிப்பட்ட கிராமத்தை வேறு எங்கும் பார்க்க முடியாது. மதாபரில் வீடுகள் குறைவு; எல்லாமே பங்களாக்கள்தான். ஒவ்வொரு பங்களாவைப் பற்றியும் சுவாரஸ்யமான பல கதைகளைச் சொல்கிறார்கள். “இந்த வீட்டில் திரையரங்கம் உண்டு. அதன் திரை லண்டனிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டது. இந்த வீட்டின் மூன்றாம் மாடியில் நீச்சல் குளம் இருக்கிறது. பளிங்குக் கற்களால் ஆனது அது. அந்த வீட்டில் பெரிய திறந்தவெளி வராந்தாவில் எவ்வளவு வெயில் தகிக்கும்போதும் நடக்கலாம்; தரைக்குப் போடப்பட்டிருக்கும் கல் எவ்வளவு சூட்டையும் உள்வாங்கிக்கொண்டு குளிர்ச்சியாகவே இருக்கும்; ராஜஸ்தானிலிருந்து வரவழைத்தார்கள்.” 

 திரைகடல் ஓடிய முன்னோடிகள்: 

சுமார் எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் கட்ச் பிரதேச மிஸ்திரிகளால் உருவாக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று மதாபர். கடல் கடந்து வாணிபத்துக்குச் செல்வது இந்த ஊர்க்காரர்களின் ரத்தத்தில் ஊறியது. “அமெரிக்கா, கனடாவில் தொடங்கி ஆப்பிரிக்கக் கண்டத்தின் சோமாலியா, உகாண்டா வரை எங்கள் ஊர் லேவே படேல்கள் குடியேறியிருக்கிறார்கள். வெளிநாட்டு வாணிபத்தில் மட்டும் இல்லை; உள்நாட்டு வாணிபத்திலும் முன்னோடிகள். ஆங்கிலேயர் காலத்தில் ரயில்வே ஒப்பந்தப் பணிகளை எடுப்பதிலும் நிலக்கரிச் சுரங்கங்களை ஏலத்தில் எடுப்பத்திலும் முன்னின்ற சமூகம் இது. கட்ச் மாகாணத்தில் அரச குடும்பம் தவிர, கார் வைத்திருந்த முக்கியஸ்தர்களில் ஒருவரான ராய் சாகிப் விஷ்ரம் வால்ஜி ரதோர் எங்களவர்” என்கிறார் தேவ் படேல்.அந்த வசதியான பின்னணியை இன்றும் ஊர் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. சிக்கல் என்னவென்றால், பெரும்பாலான வீடுகளில் பூட்டு தொங்குகிறது அல்லது ஜன்னல் வழியே பெரியவர்கள் எட்டிப்பார்க்கிறார்கள். 

 முடியாமல் தொடரும் பயணம்:

 ‘‘ஊரோடு மிக நெருக்கமான மனப் பிணைப்பைக் கொண்டவர்கள் எங்கள் ஊர்க்காரர்கள். ஒவ்வொரு தலைமுறையிலும் வெளியே செல்லும்போதும், ‘இதோடு திரும்பிவிடுவேன். இனி விவசாயத்தைப் பார்த்துக்கொண்டு ஊரோடு இருந்துவிடுவேன்’ என்று சொல்லித்தான் கிளம்புவார்கள். ஆனால், அவர்கள் திரும்ப முடிவதே இல்லை” என்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம்? எல்லாக் கிராமங்களிலும் இதுதானே நடக்கிறது என்றுதானே கேட்கவருகிறீர்கள்? இல்லை. இங்கே விஷயம் இன்னும் கொஞ்சம் இருக்கிறது. 

போன இடத்திலேயே ஐக்கியமாகிவிடுவதில் உண்மையாகவே மதாபர்க்காரர்களுக்கு ஆர்வம் இல்லை. அதனாலேயே அவர்களுடைய சேமிப்பு எல்லாவற்றையும் இங்கேதான் சேமிக்கிறார்கள். இந்தச் சின்ன ஊரில் கிட்டத்தட்ட 20 வங்கிகள் இருக்கின்றன; ரூ. 2,500 கோடி வைப்புநிதி இருக்கிறது. கிராமத்தின் சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் எல்லாவற்றிலும் தங்கள் பங்களிப்பைத் தந்து ஜொலிக்கவைத்திருக்கிறார்கள். “எங்களூரில் முதல் பள்ளிக்கூடம் திறந்து 130 வருஷங்கள் ஆகின்றன. 1900-லேயே முதல் பெண்கள் பள்ளிக்கூடம் இங்கே உருவாகிவிட்டது” என்கிறார்கள்.

 “அப்போதிலிருந்தே எல்லோருக்கும் நாம் என்றைக்காக இருந்தாலும் ஊர் திரும்பிவிடுவோம் என்பதுதான் எண்ணம். ஆனால், காசு புலிவால்போல மாறி அவர்களைப் பிடித்துக்கொண்டிருக்கிறது”என்கிறார்கள். மதாபர் வயல்களில் வயோதிகத்தைத் தாங்கி நிற்கும் பெரியவர்களில் ஒருவர் ரூடா லாதா. “என் மகன் வருவான், வருவான் எனக் காத்திருந்து காலம் கடந்துவிட்டது. இப்போது என் பேரனுக்காகக் காத்திருக்கிறேன். எவ்வளவோ சொத்துகள் இருக்கின்றன. என்றாலும் ஒரு கிராமத்தானுக்கு நிலம்போலச் சொத்து வருமா? அதுதான் அவன் வரும் நாளில் இந்த நிலம் அவனுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வயதில் நான் வயலில் நின்றுகொண்டிருக்கிறேன்” என்பவர், நிலத்தை வெறித்துப்பார்க்கிறார்.

கொஞ்சம் இடைவெளி விட்டு, “நம்முடைய திறமைகளை உள்ளூருக்குள் பயன்படுத்திக்கொள்ள நம்முடைய அரசாங்கங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே?” என்கிறார். “நாம் இப்போது இரட்டை மனநிலையில் வாழ்கிறோம். நம் புத்தி நகரத்திலும் ஆன்மா கிராமத்திலும் கிடக்கிறது. ஊர் திரும்பினால், அனுபவிக்கும் வசதி பறிபோய்விடுமோ எனும் பயம் நம் கனவுகளைக் கவ்விக்கொண்டிருக்கிறது. இது முடிவே இல்லாத ஆட்டம்” என்கிறார். சுருக்கங்களில் புதைந்திருக்கும் அவருடைய கண்கள் நிலத்தையே வெறிக்கின்றன. சோளக் கதிர்களில் ஊடுருவும் சூரியனின் கதிர்கள் சிதறி மறைகின்றன. 


 நமக்கெல்லாம் நாலாம் தலைமுறையே நல்லா யோசிச்சா தான் நாக்குல சிக்கும். அந்த படத்த பாருங்க தலைமுறைக்கு மரம் வரைஞ்சு பாகம் குறிச்சு வச்சிருக்காங்க - மதாபர்வாசிகள்! 

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...