தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Sunday 29 December, 2013

தெலுங்கானா வரலாறும் போராட்டமும்


தெலுங்கானா போராட்டம் என்பது இன்று நேற்றல்ல சுதந்திரம் பெற்ற காலம்  முதல் இருந்து வருகிறது. சுதந்திரம் பெற்ற பொழுது தெலுங்கு பேசும் மக்கள் மொத்தம் 22 மாவட்டங்களில் இருந்தனர். அவற்றில் 9 ஹைதராபாத் நிஜாமிலும், 12 மதராஸ் மாநிலத்திலும் இருந்தன. 

ஹைதராபாத் நிஜாம் ஓட்டம்:
இன்றைய ஆந்திரா என்பது மொழியால் பொதுவானது என்றாலும் மூன்று பிரிவானது, ராயலசீமா எனப்படும் பழைய மதராஸ் மாநிலத்தில் இருந்த தென் மாவட்டங்கள். ஆந்திரா எனப்படும்  கிழக்கு கடற்கரை ஓர மாவட்டங்கள் மற்றும் மத்தியில் இருந்த ஹைதராபாத் அல்லது தெலுங்கனா எனப்படும் பழைய ஹைதராபாத் மாநிலம்.
இதில் ஹைதராபாத் மாநிலம் என்பது சுதந்திரத்திற்கு பின்னரும் தனி நாடாக இருந்தது. அதன் மன்னன் ஒஸ்மான் அலி கான். அதற்கென தனி சட்டம், மொழி (ஆமாம் உருது! இன்றும் இது அதிக மக்களால் பேசப்படுவது), ராணுவம், நாணயம், ரெயில்வே, போஸ்டல் ஸ்டாம்ப் என இருந்தன. 1948 ம் வருடம் செப்டம்பர் 17 அன்று, அப்போதைய உள்துறை அமைச்சர் திரு. வல்லபாய் பட்டேல் அவர்கள் மற்றும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கையால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அந்த அரசர் துருக்கி நாட்டுக்கு தப்பி ஓடினார்.

ஸ்ரீ பொட்டி ஸ்ரீ ராமுலு இறப்பு :
பிரச்சனை இந்த மனிதரின் இறப்பில் இருந்து ஆரம்பம் ஆகிறது. 1952 அக்டோபர் மாதம் ஸ்ரீ பொட்டி ஸ்ரீ ராமுலு, ஆந்திர ராஷ்டிர என்ற மொழிவாரி மாநிலம் கோரி 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்தார். இதற்கு பின்னர் ஏற்பட்ட கலவரம் காரணமாக, அப்போதைய மத்திய அரசு 1953 அக்டோபர் 1 அன்று இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலமாக ஆந்திரா பிரதேசை உருவாக்கியது. இதன் தலை நகராக கர்னூல் இருந்தது. ஆனாலும் தெலுங்கானா பகுதி இணையாமல் இருந்தது. பின்னர் மத்திய அரசால் தொடங்கப்பட்ட மாநில மறு சீராய்வு கமிட்டி-ன் பரிந்துரைப்படியும், தெலுங்கானா தலைவர்கள் மற்றும் ஆந்திரா தலைவர்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி தெலுங்கானா பகுதி ஆந்திரா மாநிலத்துடன் இணைந்தது.

நீதிபதியின் கருத்து  மற்றும் ஒப்பந்தம்:
அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. பாசல் அலி அவர்கள் தெலுங்கானா தனியாக இருக்க வேண்டும். அந்த மக்கள் விரும்பினால் மற்றும் சட்டசபையின் 3ல் 2பங்கு ஆதரவுடன் ஆந்திராவுடன் இணையலாம் எனவும் இணைப்புக்கு ஆதரவாக மற்றும் எதிர்ப்பாக தன்னுடைய கருத்துக்களை கூறினார்:
ஆதரவான கருத்துக்கள்:
1.  ஆந்திர பகுதி, ஹைதராபாத் பகுதியின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பை உபயோகப்படுதுவதன் மூலம் அதன் தலை நகர (கர்நூல்) பிரச்சனைக்கு தீர்வு காணலாம்
2. கனிம மற்றும் வேளாண் வளங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் சீரான வளர்ச்சி காணலாம்.
எதிர் கருத்துக்கள்:
1. வளர்ச்சியில் சரி சமம் இல்லா பகுதிகளை இணைப்பது கூடாது 
2. ஆந்திரா பற்றாக்குறை நிதியிலும், ஹைதராபாத் மிகுதி நிதியிலும் உள்ளவை. இந்த பகுதிகளை இணைப்பது ஆபத்தானது 
3. தெலுகு ஆட்சி மொழி ஆவதன் மூலம் தெலுங்கானா மக்கள் பாதிப்படைவர். * அங்கு பலகாலமாக உருது ஆட்சி மொழி
4. தெலுங்கானா மலை சார் பகுதி ஆனால் ஆந்திரா சம தள பகுதி, எனவே தண்ணீர் பங்கீடு பிரச்சனை வர வாய்ப்புள்ளது 
இரு பகுதிகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்ட ஒப்பந்த சரத்துக்கள் கீழே :
1. ஒரு பகுதியை சார்ந்தவர் முதலமைச்சர் பதவியில் இருந்தால் மற்றொரு பகுதியை சேர்ந்தவர் துணை முதல்வர் ஆக வேண்டும் மற்றும் முக்கிய துறைகளில் ஏதேனும் இரண்டு தெலுங்கானா பகுதிக்கு ஒதுக்கப்படவேண்டும்.(சஞ்சீவ ரெட்டி காலத்தில் துணை முதல்வர் பதவி ஒழிக்கப்பட்டது)
2. மது விலக்கு ஆந்திரா பகுதிக்கு மட்டும். (தெலுங்கானாவில் மது விற்ற பணம் ஆந்திராவின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது)
3. நிர்வாக செலவுகள் 2:1 (ஆந்திரா : தெலுங்கானா) என்ற அளவில் பிரிப்பு ( ஆந்திரா தெலுங்கானா பணத்தை உபயோகித்தது)
4. வேலைவாய்ப்பு - மக்கள் தொகை அடிப்படையில்
5. தெலுங்கானா பகுதியில் 12 வருடங்களுக்கு மேல் வசிப்பவருக்கே வேலை  (இது பின்பு 4 வருடம் என ஆனது )
6. ஆந்திரா பகுதி மக்கள் தெலுங்கானா பகுதியில் விவசாய நிலங்களை வாங்க முடியாது 
இந்த ஒப்பந்தத்தின் நிலைமையை தற்போதைய நிலைமையுடன் ஒப்பிட்டு பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

முதல் போராட்டம் :
1969 ம் ஆண்டு தெலுங்கானா பகுதி மாணவர்கள் மொழிப்பிரச்சனை மற்றும் வேலை வாய்ப்பு காரணங்களுக்காக போராட்டம் நடத்தினர். ஒஸ்மானியா பல்கலைக்கழகம் போராட்ட களமாக இருந்தது.  மர்ரி சன்னா ரெட்டி தலைமை தாங்கி நடத்தினார். "ஜெய் தெலுங்கானா" என்று முழங்கிய இவர், இந்திரா காந்தியின் அரசியலில் சிக்கி தன்னுடைய தெலுங்கானா பிரஜா சமிதி கட்சியை காங்கிரசுடன் இணைத்து முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டார். ஆனால் இந்த போராட்டத்தில் உயிரழந்த மாணவர்களின் எண்ணிக்கை 350க்கு மேல் இருக்கும். இவருக்கு அடுத்து தெலுங்கானா பகுதியை சேர்ந்த நரசிம்ம ராவ் (சிரிக்காத பிரதமர் தான்) அவர்களும் முதலமைச்சர் ஆக்கப்பட்டு போராட்ட வேகம் தணிக்கப்பட்டது. இது மறுபடியும் அரசியலாக்கப்பட்டது 90 களில் தான்.

சந்திரசேகர ராவ்:
தற்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான இவரே அடுத்த போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர். ஆனால் இந்த முறை தன்னுடைய சுய லாபத்துக்காக. தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த இவர், 1999 ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்த இவருக்கு துணை சபா நாயகர் பதவி கிடைத்தது. இதனால் ஏமாற்றம் அடைந்தவர் 2001ல் அந்த கட்சியை விட்டு வெளியேறி ஆரம்பித்ததுதான் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி. தனி மாநில கொள்கைக்கு வித்தியாசமாக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவு தெரிவிக்க கம்யூனிஸ்ட் மற்றும் தெலுங்கு தேசம் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் சந்திர சேகர ராவ் தொடக்கி வைத்த உண்ணா விரத போராட்டங்கள், மாணவர்களின் தொடர்ச்சிப்போராட்டங்கள் மற்றும் சில தற்கொலைகளின் காரணமாக தள்ளி போடப்பட்டு வந்த தெலுங்கானா மாநிலம் தற்போது வடிவம் பெற்றுள்ளது. ஆனால் ஆந்திரா பகுதியினர் இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து கொண்டுதான் இருக்கின்றனர். ஏனென்றால் ஹைதராபாத் நகரமே தெலுங்கானா பகுதியில் தான் உள்ளது. தெலுங்கானாவுக்கும், ஆந்திரா மாநிலத்திற்கும் ஹைதராபாத் பொதுவான தலை நகராக அடுத்த 10 வருடங்க்களுக்கு இருக்கும் என தெரிவித்துள்ளனர். 

காரணங்கள்:
 இந்த பிரிவினைக்கான காரணங்கள் என பார்த்தால் முதலாவது சுதந்திரதிற்கு முன்னும் பின்னும் தெலுங்கானா மக்கள் சுதந்திரமாக இருந்தனர் ஆனால் நில பிரபுக்களிடம் அடிமையாக இருந்தனர். இணைப்பிற்கு பிறகு சுதந்திரம் என்ற பெயரில்  அவர்களின் பிரச்சனை தீர்க்கப்படவில்லை.

இணைப்புக்கு பின்னர் தெலுங்கானா பகுதியில் போதுமான தொழில் கட்டமைப்பு இல்லாதது, போதிய வேலை வாய்ப்பின்மை மற்றும் இரண்டு பகுதிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு என கவனிகாப்படாத பிரச்சனைகள் ஏராளம். ஆனால் இந்த காரணங்களுக்காக மாநிலத்தை பிரிப்பது என்பது எந்த விதத்திலும் தீர்வாகாது. பிரிப்பதனால் மட்டும் தெலுங்கானா பிரச்சனைகள் தீர்ந்து விடாது, ஏனெனில் இது முழுக்க முழுக்க அரசியல்வாதிகளின் சுய நலத்திற்காக ஓட்டு வாங்க மட்டுமே பிரிக்கப்படுகிறது. இதற்கு ஒரே மாற்று சிறந்த நிர்வாகம் மற்றும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி மட்டுமே.    

முடிவு:
அரசின் இந்த பிரிவினை முடிவை தொடர்ந்து பல விவாதங்களுக்கு இட்டுச்செல்லும். மேலும் தனி மாநிலம் கேட்கும் மற்ற பிரிவினைவாதிகளுக்கு, இது முன்னுதாரணமாக மேற்கோள் காட்டப்படும்.

தற்பொழுது பிரிக்க காத்திருக்கும் மாநிலங்கள்:

போடோலாந்து   - அசாம்
bundelkand (தமிழாக்கம் தவறான அர்த்தத்தை கொடுக்கிறது) - உத்தர பிரதேஷ் மற்றும் மத்திய பிரதேஷ்
போஜ்பூர் - உத்தர பிரதேஷ் மற்றும் பீகார்
கூர்க் - கர்நாடகம்
கோர்க்காலாந்து - மேற்கு வங்காளம்
மரத்வாடா மற்றும் விதர்பா - மகாராஷ்டிரம்
மிதிலாஞ்சல்  - பீகார்

நன்றி: http://www.tnpsctamil.in

Friday 6 December, 2013

விவசாயம்: நீரில் மூழ்கினாலும், அழுகாத புதிய நெல்!

          நீரில், 12 நாட்கள் வரை மூழ்கினாலும், அழுகாத புதிய நெல் ரகத்தை கண்டுபிடித்த, பேராசிரியர் கதிரேசன்: நான், அண்ணாமலை பல்கலை கழகத்தில், பேராசிரியராகவும், உழவியல் துறை தலைவராகவும் பணியாற்றுகிறேன். நம் முன்னோர், பல ஆண்டுகளாக மூன்று போகம் பயிரிட்டு, லாபத்தில் விவசாயம் செய்தனர். ஆனால், தற்போது வறட்சி காரணமாக, வடகிழக்கு பருவ மழையை மட்டுமே நம்பி, விவசாயம் செய்கின்றனர். வறட்சி இருந்தாலும், சில சமயங்களில் அதிக மழை பொழிந்து, பயிர் முற்றிலும் நீரில் மூழ்கி, பலத்த நஷ்டமடைகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, அண்ணாமலை பல்கலை கழக உழவியல் துறையும், பிலிப்பைன்சில் உள்ள நெல் ஆராய்ச்சி மையமும் இணைந்து, நீரினுள் நெற் பயிர் மூழ்கியிருந்தாலும், பல நாட்களுக்கு அழுகாமல் வளரக்கூடிய, புது ரக நெல்லை உருவாக்க முயற்சித்தோம். 'பொன்மணி' எனும், சி.ஆர்.1009 மற்றும் ஐ.ஆர்.40931 ஆகிய நெல் வகைகளை, மரபணு மாற்றம் செய்து, அதிலிருந்து புது ரக நெல்லை உருவாக்கி, 'சிகப்பி நெல்' என, பெயரிட்டோம்.

          மரபணு மாற்றத்தால், சில சமயங்களில் தீங்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மனிதர்களுக்கு தீங்கு ஏற்படுத்தாத, 'மார்க்கர் அசிஸ்டட் செலக் ஷன் டெக்னிக்' தொழில்நுட்பத்தில், சிகப்பி நெல்லை உருவாக்கினோம். சாதாரணமாக, 1 ஹெக்டேரில், 5.2 டன் வரை நெல் அறுவடை செய்யலாம். நெற்பயிர், 10 முதல், 12 நாட்கள் வரை நீரில் மூழ்கி இருந்தாலும், பயிர் அழுகாமல், ஹெக்டேருக்கு குறைந்தது, 3.4 டன் அறுவடை செய்யலாம். சிகப்பி நெல்லை பயிரிடுவதன் மூலம், பலத்த மழையில் நெற்பயிர் மூழ்கினாலும், பெருத்த நஷ்டத்தை தவிர்ப்பதுடன், குறைந்தபட்ச லாபத்தை பெற முடியும். மேலும், 154 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகும் சிகப்பி நெல், சம்பா பருவத்திற்கு உகந்தது. நடுத்தர குட்டை உயரம், காற்றடித்தாலும் சாயாத தன்மை உடைய சிகப்பி நெல்லை, இட்லி, தோசை தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம். தற்போது, அண்ணாமலை பல்கலை சார்பில், சிகப்பி ரக நெல் விதை, இலவசமாக வழங்கப்படுகிறது. தொடர்புக்கு: 04144- 239816




Thursday 31 October, 2013

தீபாவளி :"ஒளிகாட்டும் வழி"

"ஒளிகாட்டும் வழி"  

அன்பின் மொழியினாய் அறம்செய முயலுவோம்;
ஆசைகள் நீங்கிட ஆலயம் தொழுகுவோம்;
இயல்பின் ஒளிஎழ இன்னலை அகற்றுவோம்;
ஈகை பண்பினால் இனிப்பினை பகிருவோம்;
உழைப்பின் உன்னத மகத்துவம் உணருவோம்;
ஊரே மகிழ்ந்திட உறவினை பரப்புவோம்;
எளியோர் மகிழ்ந்திட இயன்றதை உதவுவோம்;
ஏழ்மை குறைந்திட ஏற்றத்தை  காணுவோம்;
ஐயம் அகன்றிட வையகம் போற்றுவோம்;
ஒளியின் வழியிலே இருளினை விலக்குவோம்;
ஓய்வை போற்றிட ஒலியினை சுருக்குவோம்;
ஔவியம் அகன்றிட அகல்ஒளி ஏற்றுவோம்;
அஃதே வழியினாய் நன்மையை பெருக்குவோம்;
சிவகாசி சிறுவர்க்கும் சிரிப்பொலி(ளி) வழங்குவோம்;
சீர்திருத்த முறையிலே சிக்கனம் பழகுவோம்;
சுற்றம் மாசில்லா சூழ்நிலை பேணுவோம்;  
சிந்தையில் ஒளிநாளை செலுத்தியே மகிழுவோம்.


"அனைவருக்கும் இனிய தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்"



திரு. ரூபன் அவர்களின் தீபாவளி கவிதைப் போட்டிக்காக எழுதி பகிரப்பட்டுள்ளது.  இதிலுள்ள பிழை பொறுத்து சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்ள...


நன்றி.

நட்புடன்,
நடராஜன் வி.

Monday 28 October, 2013

குறை ஒன்றும் இல்லை பாடல்


குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

MP3 லிங்க்: 

Friday 11 October, 2013

பயனுள்ள இணையதள முகவரிகள்

01. இந்தியதேர்தல் ஆணையம் – இணையதள முகவரி
http://www.elections.tn.gov.in/eroll 

02. த‌கவலறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி  http://www.rtiindia.org/forum/content/


03. இந்திய அரசின் இணையதள முகவரி

http://india.gov.in/

04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி

http://www.tn.gov.in/

05.தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி

http://www.tneb.in/ 

06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி

http://www.tnpolice.gov.in/

07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி

http://www.hcmadras.tn.nic.in/

08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி

http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp



09. இந்திய தூதரம் – இணையதள முகவரி
http://www.indianembassy.org/

10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி

http://www.tnreginet.net/ 

11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி

http://www.mca.gov.in/

12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி
http://www.chennaicorporation.gov.in/ 

13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி

http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp

14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி
http://www.indiapost.gov.in/nsdefault.htm 

15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி

http://www.incredibleindia.org/index.html

16. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி

http://supremecourtofindia.nic.in/ 

17. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி
http://www.tamilnadutourism.org/

Thursday 3 October, 2013

உலகளாவிய தமிழர்கள்: பகுதி 1

1. சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்:
வெங்கி ராமகிருஷ்ணன் என அழைக்கப்படும் சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (Sir Venkatraman Ramakrishnan, பிறப்பு: 1952), தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திய அமெரிக்கரும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வுக்கழகத்தில் உயிரியலாளரும் ஆவார். அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கருஅமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான "ரைபோசோம் (ribosome) எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுக்காக" வெங்கட்ராமனுக்கு 2009ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

2. இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி:
இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி (Indra Krishnamurthy Nooyi, பிறப்பு:அக்டோபர் 28, 1955) உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான பெப்சியின் தலைவர் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆவார். இந்திரா நூயி ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். அவர் தன் பள்ளிப்படிப்பை சென்னையில் நிறைவு செய்தார். போர்பஸ் பத்திரிகை அதன் 2008 ஆம் ஆண்டிற்கான உலகின் 100 மிக வலிமையான பெண்கள் பட்டியலில் நூயியை மூன்றாவது நபராக மதிப்பிட்டது என்ற   சிறப்பிற்குரியவர்.

3. வி. ஏ. சிவா ஐயாதுரை:
வி. ஏ. சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) (பிறப்பு: திசம்பர் 2 1963, தமிழ்நாடு, இந்தியா) இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும் புதியன கண்டுபிடிப்பாளரும், தொழில் முனைவோரும் ஆவார். இன்று அறியப்படும் மின்னஞ்சல் (EMAIL) என்பதை உருவாக்கியவர் என்னும் பெருமைக்குரியவர். இவர் 1978 –ல் உயர்நிலைப்பள்ளியில் இருந்தபொழுதே மின்வழி அஞ்சல்களை அனுப்பும் மின்னஞ்சல் முறைமையையும், மின்னஞ்சல் என்பதை "EMAIL" என்னும் பெயரிலும் உருவாக்கி நிறுவியவர்.

Monday 2 September, 2013

முதுநிலை அறிவியல் படிப்பில் 13 வயதில் சேர்ந்துள்ள மாணவி

முதுநிலை அறிவியல் படிப்பில் 13 வயதில் சேர்ந்துள்ள மாணவி:

உத்தர பிரதேசத்தில், 13 வயது சிறுமி, இளநிலை அறிவியல் பட்டம் பெற்று, முதுநிலை அறிவியல் படிப்பில் சேர, லக்னோ பல்கலைக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லக்னோ நகரைச் சேர்ந்த, கூலித் தொழிலாளி பகதூர் வர்மா. இவருக்கு, ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். பகதூரின், கடைசி மகள் சுஷ்மா, 13, சிறு வயதிலேயே, அறிவுக் கூர்மையுடன் காணப்பட்டார். 2000ம் ஆண்டில் பிறந்த சுஷ்மா, தன் இரண்டரை வயதில், லக்னோவில் நடைபெற்ற, ராமாயணம் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். சிறு வயதில், கடினமான ராமாயணத்தை மனப்பாடம் செய்து ஒப்பித்த சுஷ்மா, தன் 5 வது வயதில், 10ம் வகுப்பு பாடங்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்தார். எனினும், 5 வயதில், நேரடியாக, 10ம் வகுப்பில் சேர அனுமதி கிடைக்காததால், 2005 - 06 ல், 9 ம் வகுப்பில் சேர்ந்தார். 2006 - 07ல், 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று, நாட்டிலேயே, மிகக் குறைந்த வயதில், 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவி என்ற பெருமையை பெற்றார்.
அதன் பின், 2009 - 10 ம் ஆண்டு, பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று, தன், 10 வது வயதில், லக்னோ பல்கலை அனுமதியுடன், பி.எஸ்சி., விலங்கியல் மற்றும் உயிரியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்தார். இந்த ஆண்டு, ஜூனில் வெளியான, பி.எஸ்சி., பட்டத் தேர்வு முடிவுகளில், 66 சதவீத மதிப்பெண்களைப் பெற்று பட்டப் படிப்பை நிறைவு செய்தார்.இதன் பின், லக்னோ பல்கலையில், எம்.எஸ்சி., மைக்ரோ பயாலஜி படிப்பில் சேர விண்ணப்பித்தார். இதிலும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதன் மூலம், நாட்டிலேயே, 13 வயதில் முதுநிலை அறிவியல் பட்டம் படிக்கும் முதல் மாணவி என்ற பெருமையை சுஷ்மா பெற்றுள்ளார்.பல்கலையில் இடம் கிடைத்தும், குடும்பச் சூழல் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில், சுஷ்மா தவிக்கிறார். இந்த தகவல் அறிந்த பலரும், சுஷ்மாவுக்கு உதவ முன்வந்துள்ளனர்.பிரபல பாடலாசிரியர், ஜாவித் அக்தர், சுஷ்மாவின் கல்விக் கட்டணம் குறித்த விவரங்களை அனுப்பும்படி, பல்கலை நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். சுஷ்மாவின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

Tuesday 20 August, 2013

ரக்க்ஷா பந்தன் எனும் சகோதர திருநாள்:

ரக்ஷாபந்தன் எனும் சகோதர திருநாள் நம் இந்திய திருநாட்டில் கொண்டாடி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. அதன் அடிப்படையான வரலாற்று செய்தியை நாம் இங்கு காண்போம். நம்  வீடுகளில் சகோதர, சகோதரிகள் இணைந்து பிறக்கிறார்கள். ஆனால், சிலருக்கோ சகோதரரோ, சகோதரியோ இருப்பதில்லை. இது அவர்கள் மனதில் ஒரு ஆதங்கமாகவே இருக்கும். இப்படி ஒரு நிலைமை, விநாயகரின் மகன்களுக்கே இருந்ததாம்.

தமிழகத்தில் நாம் விநாயகரை பிரம்மச்சாரியாகவே காண்கிறோம். வட மாநிலங்களில் சித்தி, புத்தி என்ற தேவியர் அவருக்கு உண்டு. இவர்களுக்கு சுபம், லாபம் என்ற ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஒருமுறை, இவர்கள் தங்கள் சகோதரர்களின் கையில் ரக்ஷா என்னும் கயிறு கட்டும் சகோதரிகளைக் கண்டனர். தங்களுக்கும் சகோதரி வேண்டுமென தந்தையிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையும் நிறைவேறியது. சந்தோஷப்பட்ட சுபமும் லாபமும், தங்கள் தங்கைக்கு "சந்தோஷி' என்று பெயர் சூட்டினர். சந்தோஷிமாதா வழிபாடு வடமாநிலங்களில் பிரசித்தம். இவர்களைக் குடும்பமாக தரிசிக்க வேண்டுமானால், அகமதாபாத்திலுள்ள அம்பாஜி மாதா கோயிலுக்குச் செல்ல வேண்டும். அங்கே தனி சந்நிதியே இருக்கிறது.

இந்த நிகழ்வின் அடிப்படையில், பெண்கள் யாரை சகோதரர்களாக ஏற்கிறார்களோ, அவர்களுக்கு "ராக்கி' என்னும் கயிறு கட்டுவார்கள். "ரக்ஷ' என்றால் "பாதுகாப்பு தரும் கயிறு'. இதை அணிவிக்கும் தினமே ரக்ஷாபந்தன். ஆவணி பவுர்ணமியன்று இது கொண்டாடப்படுவது வழக்கம். இன்றும், நாளையும் பவுர்ணமி திதி இருப்பதால், இரண்டு நாட்கள் சகோதரர்களுக்கு கயிறு கட்டலாம். சொந்த சகோதரர்கள் உள்ளவர்களும், அவர்களின் நலன் கருதி இந்தக் கயிறை அணிவிக்கலாம். ரக்ஷா கயிறு கட்டுவதன் மூலம், ஒரு ஆண், குறிப்பிட்ட பெண்ணின் பாதுகாப்பு, எதிர்கால வாழ்வுக்கு துணையாக இருப்பதாக உறுதியளிக்கிறார்.மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வந்த விஷ்ணு, பூலோகம் வந்த போது, அவரைப் பிரிய விரும்பாத லட்சுமியும் பூலோகம் வந்தாள். சாதாரண பெண்ணாக வேடம் தரித்த அவள், ஆவணி பவுர்ணமியன்று மகாபலியின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தாள். மகாபலியைத் தன் சகோதரனாக எண்ணி ரக்ஷா கயிறு கட்டினாள். இதனாலும், இந்த விழா நடப்பதாகச் சொல்வதுண்டு.

கி.பி.1303ல் ராஜஸ்தானில் உள்ள சித்தூர்கரை அந்நியப்படைகள் தாக்கும் போது, ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக வரலாறு கூறுகிறது. அந்த மன்னர்களும் சகோதர உணர்வுடன் ராணியைக் காக்க தங்களின் படையை அனுப்பி உதவி செய்தனர். சகோதரத்துவத்தை பேணும் இந்த திருவிழாவை நாமும் கொண்டாடி மகிழ்வோம்.

Monday 19 August, 2013

பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்


மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!


ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

Wednesday 7 August, 2013

எந்த நாட்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ வேண்டும் உங்களுக்கு?

எல்லா  நாட்டிற்கும் தகுந்தாற்போல் பாஸ்போர்ட் அளவு போட்டோக்களை நாம் கொடுக்கும் போட்டோவிலிருந்து தரும் இணையதள முகவரி: http://www.makepassportphoto.com/




மேற்காணும் படத்தில் உள்ளவாறு உங்கள் போட்டோவினையும் அதற்கேற்ற தெரிவுகளையும் தேர்வு செய்து சில நிமிடங்களில் எந்த நாட்டு பாஸ்போர்ட் அளவு போட்டோவினையும் நீங்கள் பெறலாம். 

"இந்த பதிவு உங்களும் பிடித்திருந்தால் கருத்துரை/பகிர்வு செய்யுங்கள்"

Sunday 4 August, 2013

இலவச மொபைல் ரீசார்ஜ் பெறுவது எப்படி? பதிவு-1

நம்மில் பலர் இணையதளங்களில் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே  பயன்படுத்துக்கின்றோம். ஆனால் சிலர் இந்த நேரத்திலும் பயன்(பணம்) ஈட்டும் தருணங்களாகவும் மாற்றிவருகின்றனர். அந்த வகையில் இணையத்தில் சுலபமான GKக்கு பதிலளித்து இலவச மொபைல் ரீசார்ஜ் பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.  இவற்றில் உங்கள் மொபைல் என்னுடன் சில சுயக்குறிப்புகளை பூர்த்தி செய்து Register செய்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள அனைத்து மொபைல் நெட்வொர்க்கிற்கு மட்டும். மேலும்,

KUIZR :

இங்கு Register செய்வதன் மூலம்  கீழ்க்காணும் படத்தில் உள்ள பலன்களை பெறலாம்.




அதற்கான லிங்க்:
http://www.kuizr.com/

LAAPTU :
இங்கு Register செய்வதன் மூலம்  கீழ்க்காணும் படத்தில் உள்ள பலன்களை பெறலாம்.




அதற்கான லிங்க்:
http://g.laaptu.com/

YPOX :
இங்கு Register செய்வதன் மூலம்  கீழ்க்காணும் படத்தில் உள்ள பலன்களை பெறலாம்.


அதற்கான லிங்க்:
http://i.ypox.com/

மேற்கண்ட இணையதளங்கள் இலவச SMS அனுப்பும் வசதியையும் அளிக்கின்றன. அதற்கும் பைசாக்களில் பணம் அளிக்கின்றன. இவற்றில் பதிந்து குவிஸ் விளையாடுவதன் மூலம் பொது அறிவு (GK) வளர்வதுடன் குறைந்தது 5 அல்லது 6 நாட்களுக்கு ஒருமுறை குறைந்த மதிப்பு ரூ. 10 முதல் (Minimum denomination as per your mobile network)  ரீசார்ஜ் செய்துக்கொள்ளலாம். ஆகமொத்தம் மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை (ரூ. 40 வரை அதற்க்கு மேலும் எண்ணிலடங்கா)
ரீசார்ஜ் செய்துக்கொள்ளலாம். மூன்று வெப்சைட் -ம் சேர்த்து குறைந்தது ரூ. 100 முதல்  இலவச மாத மொபைல் ரீசார்ஜ் செய்து செலவினை மிச்சப்படுத்தலாம். பொது அறிவினையும் வளர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு: மேற்கண்ட அனைத்தும் இணையத்தில் நேரத்தை பயனுள்ளவழியில் பயன்படுத்துவதற்கு மட்டுமே. அதிக நேரம் இணையத்தில் நேரத்தை செலவழிப்போர் பயன்படுத்திக்கொள்ளலாம். மற்றவர்கள் தவிர்க்கவும். அல்லது எதாவது ஒன்றை மட்டும் பயன்படுத்தவும்.


நன்றி. பதிவு பிடித்திருந்தால் கருத்து தெரிவித்துச் செல்லவும். அதிகப்பிடித்து மற்றவர்களும் பயன்படவேண்டும் என்று நினைத்தால் பகிர்ந்துக்கொள்ளவும்.

Saturday 13 July, 2013

பயனுள்ள இணையதள தொகுப்புகள்:

இங்குள்ள சில இணைப்பி(லிங்க்)-ல் ஏதேனும் பிழை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றுள்  உள்ள நம்பகத்தன்மையை பார்த்து பயன்படுத்தவும்.

1. Voter ID Online Registration

2. பட்டா / சிட்டா அடங்கல்

3. அ-பதிவேடு விவரங்களை பார்வையிட

4. வில்லங்க சான்றிதழ்

5. பிறப்பு சான்றிதழ்

6. இறப்பு சான்றிதழ்

7. சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்

8. இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்

9. ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு (E-டிக்கெட்) முன் பதிவு

     I. TNSTC

     II. IRCTC.co.in

     III. Yatra.com

     IV. Redbus.in

10. விமான பயண சீட்டு

     I. Cleartrip

     II. Myke My Trip

     III. Ezeego1

11. BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி

12. Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி

     I. Oximall.com

     II. Rechargeitnow.com

     III. Itzcash.com

13. E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி

14. E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி

     I. Ebay.co.in

     II. Indiatimes.com

     III. Rediff.com

15. Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி

     I. Icicidirect.com

     II. Hdfcsec.com

     III. Religareonline.com

     IV. Kotaksecurities.com

     V. Sharekhan.com

16. மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்

     I. Sbi.co.in

     II. Indianbank.in

     III. Ibo.in

     IV. Bankofindia.com

     V. Bankofbaroda.com

     VI. Axisbank.com/b>

     VII. Hdfcbank.com

17. பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்து கொள்ளும் வசதி

     I. Tn.gov.in

     II. Tnresults.nic.in

     III. Dge3.tn.nic.in

     IV. Dge2.tn.nic.in

     V. Pallikalvi.in

     VI. Southindia.com

     VII. Chennaionline.com

     VII. Chennaionline.com

18. சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய

19. இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி

     I. Classteacher

     II. Lampsglow

     III. Classontheweb.com

     IV. Edurite

     V. Cbse.com

20. 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய

21. UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி

     I. Tnpsc.gov.in

     II. Upsc.gov.in

     III. Upscportal.com

     IV. Iba.org.in

     V. Rrcb.gov.in

     V. Trb.tn.nic.in

22. உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி

     I. Employmentnews.gov.in

     II. Omcmanpower.com

     III. Naukri.com

     IV. Monster.com

23. இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய

     I. Ssbrectt.gov.in

     II. Bsf.nic.in

     III. Indianarmy.nic.in

24. இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய

25. Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி

     I. Skype.com

     II. Gmail.com

     III. Yahoochat

     IV. Meebo

26. அடிப்படை கணினி பயிற்சி

     I. Homeandlearn.co.uk

     II. Intelligentedu.com

     III. Ehow.com

27. சிறார்களுக்கு கணினி பயிற்சி

28. இ – விளையாட்டுக்கள்

     I. Zapak.com

     II. Miniclip.com

     III. Pogo.com

     IV. Freeonlinegames

     V. Roundgames.com

29. ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்

     I. Google.com

     II. Wikipedia.com

     III. Hotmail.com

     IV. Yahoo.com

     V. Ebuddy.com

     VI. Skype.com

30. தகவல் அறியும் உரிமை சட்டம்

     I. Rti.gov.in

     II. Rtiindia.org

     III. India.gov.in

     IV. Rti.org

31. சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி

     I. Incredibleindia.org

     II. India-tourism.com

     III. Theashokgroup.com

     IV. Smartindiaonline.com

32. திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி

     I. Tamilmatrimony.com

     II. Kalyanamalai.net

     III. Bharatmatrimony.com

     IV. Shaadi.com

33. குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய

34. ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள

     I. Koodal.com

     II. Freehoroscopesonline.in

35. இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி

36. இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்

37. இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்

     I. Tnfinds.com

     II. Justdial.com

38. இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்

     I. Tnfinds.com

     II. Justdial.com

     I. Tnfinds.com

     II. Justdial.com

     I. Tnfinds.com

     II. Justdial.com

     II. Justdial.com

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...