தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Sunday 30 June, 2013

எஸ்.எம்.எஸ்., மூலம் ரயில் டிக்கெட்:

எஸ்.எம்.எஸ்., மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி, துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதற்காக, 139 மற்றும் 56776714 என்ற பிரத்யேக எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்தி மூலம், ரயில் பயண முன்பதிவு செய்யும் சேவையை ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே தொடங்கி வைத்தார். இந்த சேவையை பயன்படுத்த, ஒருவர் தனது மொபைல் எண்ணையும், வங்கி அளிக்கும் விவரத்தையும் ஐ.ஆர்.சி.டி.சி., வசம் பதிவு செய்து கொள்ள வேண்டும். 


இதன்பின், தாங்கள் பயணம் செய்ய உள்ள ரயிலின் எண், செல்லும் இடம், தேதி, வகுப்பு மற்றும் பயணிகளின் விவரங்களை குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். முன்பதிவு செய்யப்பட்டதற்கான எஸ்.எம்.எஸ் கிடைத்தவுடன், அதை காண்பித்து பயணம் செய்யலாம்.




No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...