தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Friday 19 December, 2014

மரங்களும் அதன் பயன்களும்...

மரங்கள் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப, பலப்பல சூழ்நிலைகளுக்கேற்ப, அவரவருக்குத் தேவையான மரங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த மரங்கள் நமது சூழ்நிலைக்கேற்ப மற்றும் நாம் தேவைக்கு ஏற்ப வளர்க்கலாம் என்பதை பார்ப்போம்.


கோடை நிழலுக்கு:
வேம்பு, தூங்குமூஞ்சி, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம். 


பசுந்தழை உரத்திற்கு:
புங்கம், வாகை இனங்கள், கிளைரிசிடியா, வாதநாராயணன், ஒதியன், கல்யாண முருங்கை, காயா, சூபாபுல், பூவரசு.

கால்நடைத் தீவனத்திற்கு:
ஆச்சா, சூபாபுல், வாகை, ஒதியன், தூங்குமூஞ்சி, கருவேல், வெள்வேல். 
விறகிற்கு சீமைக்கருவேல், வேலமரம், யூகலிப்டஸ், சவுக்கு, குருத்தி, நங்கு, பூவரசு, சூபாபுல்.

கட்டுமான பொருட்களுக்கு:
கருவேல், பனை, தேக்கு, தோதகத்தி, கருமருது, உசில், மூங்கில், விருட்சம், வேம்பு, சந்தனவேங்கை, கரும்பூவரசு, வாகை, பிள்ளமருது, வேங்கை, விடத்தி. 

மருந்து பொருட்களுக்கு:
கடுக்காய், தானிக்காய், எட்டிக்காய் 

எண்ணெய்க்காக:
வேம்பு, பின்னை, புங்கம், இலுப்பை, இலுவம் 

காகிதம் தயாரிக்க: 
ஆனைப்புளி, மூங்கில், யூகலிப்டஸ், சூபாபுல்

பஞ்சிற்கு:
காட்டிலவு, முள்ளிலவு, சிங்கப்பூர் இலவு

தீப்பெட்டித் தொழிலுக்கு:
பீமரம், பெருமரம், எழிலைப்பாலை, முள்ளிலவு.

தோல்பதனிட, மை தயாரிக்க:
வாட்டில், கடுக்காய், திவி – திவி, தானிக்காய்

நார் எடுக்க:
பனை, ஆனைப்புளி

பூச்சி மருந்துகளாகப் பயன்படுத்த:
வேம்பு, புங்கம், ராம்சீதா, தங்க அரளி

கோயில்களில் நட:
வேம்பு, வில்வம், நாகலிங்கம், தங்க அரளி, மஞ்சளரளி, நொச்சி, அரசு 

குளக்கரையில் நட: 
மருது, புளி, ஆல், அரசு, நாவல், அத்தி, ஆவி, இலுப்பை.

பள்ளிகளில் வளர்க்க:
நெல்லி, அருநெல்லி, களா, விருசம், விளா, வாதம், கொடுக்காப்புளி, நாவல்.

மேய்ச்சல் நிலங்களில் நட:
கருவேல், வெள்வேல், ஓடைவேல், சீமைக்கருவேல், தூங்குமூஞ்சி

சாலை ஓரங்களில் நட:
புளி, வாகை, செம்மரம், ஆல், அத்தி, அரசு, மாவிலங்கு.

அரக்கு தயாரிக்க:
குசும், புரசு மற்றும் ஆல்

நீர்ப்பரப்பில் (கண்மாய்) பயிரிட:
கருவேல், நீர்மருது, நீர்க்கடம்பு, மூங்கில், நாவல், தைல மரம், ராஜஸ்தான் தேக்கு, புங்கன், இலுப்பை மற்றும் இலவமரம். 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...

V.Nadarajan said...

தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...