தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Thursday 6 October, 2011

படித்ததில் பிடித்தது: விவேகானந்தர், பாரதியார் கருத்துக்கள்...

விவேகானந்தர் கருத்துக்கள்:
  • உண்மை, தூய்மை, தன்னலமின்மை இந்த மூன்றும் கொண்டவனை நசுக்குவதற்கான ஆற்றல் உலகில் எங்கும் இல்லை. உலகமே எதிர்த்து நின்றாலும் அவன் வெற்றி பெறுவது உறுதி.
  • நமக்கு வேண்டிய ஒரே பொருள் பலம் மட்டுமே. எழுந்து நில்லுங்கள். தைரியமாய் இருங்கள். உங்கள் எதிர்காலத்தை நீங்களே நிர்ணயிக்கப் போகிறீர்கள். உங்கள் சொந்த விதியை படைப்பவர் நீங்களே. அதற்குவேண்டிய முழுபலமும், முழுத்துணையும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன.
  • பலமற்ற மூளையால் ஒன்றையும் செய்ய இயலாது. நமது இளைஞர்கள் வலிமையுள்ளவர்களாக மாற வேண்டும். அப்போது வெற்றி தானாகவே அவர்களைப் பின்தொடர்ந்து வரும்.
  • தைரியம் உங்கள் தாரகமந்திரமாகட்டும். உலகில் தோன்றியதற்கு அடையாளமாகவாழ்க்கையில் ஏதாவது ஒரு நல்லதை சாதித்துக் காட்டுங்கள்.
  • லட்சியவாதி ஆயிரம் பிழைகளைச் செய்வான் என்றால், லட்சியம் ஏதும் இல்லாதவன் ஐம்பதாயிரம் பிழைகளைச் செய்வான். அதனால் மனிதனுக்கு லட்சியநோக்கு மிக அவசியம்.
பாரதியார் கருத்துக்கள்:
  • ஆல மரத்தின் விழுதுகள் அந்த மரத்தினைத் தாங்குவது போல, பெற்றவர்களைப் பிள்ளைகள் ஆதரித்து காப்பாற்ற வேண்டும்.

  • மனிதனின் முயற்சிகளில் தவறுகள் ஏற்படுவது இயல்பே. அதற்காக ஒருவன் மனவுறுதியை இழக்கக்கூடாது.
  • உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருப்பவன் தனக்குத் தானே நல்ல நண்பனாக இருப்பான். தனக்குத் தானே நண்பனாக இருப்பவன் எல்லாரிடமும் நட்பு பாராட்டுவான்.
  • எல்லா விதமான செல்வங்களுக்கும் அறிவுதான் வேர். அறிவை வளர்த்துக் கொண்டால் கடினமான செயல் கூட எளிதாகிவிடும்.
  • பொறுமை இல்லாதவன் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது. அன்பு எங்கிருக்கிறதோ அங்கு பொறுமையும் இருக்கும்.

No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...